புவனகிரி அருகே இளைஞர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது. காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 November 2024

புவனகிரி அருகே இளைஞர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது. காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே  மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் அதன் பக்கத்து கிராமமான பு.உடையூரைச் சேர்ந்த சில நபர்களுக்கும் பு.உடையூர்  பகுதியில் வாக்குவாதம்  ஏற்பட்டு அது அடிதடியில் முடிந்திருக்கிறது. மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த இளைஞர் செல்வத்துரையை பு.உடையூரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பிடித்துக் கொள்ள அதில் ஒருவர் அவரை இரும்பு ராடு மற்றும் கால்களால் கடுமையாக தாக்கியுள்ளார். 


அப்போது செல்வத்துரை ரத்த காயத்துடன் கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்து அப்பகுதிக்கு வந்த செல்வத்துரையின் உறவினர்கள் மற்றும் மஞ்சக்கொல்லை கிராம மக்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அதற்குள் இந்த செய்தியை கேள்விப்பட்ட புவனகிரி காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். தாக்கப்பட்டதில் முகமெல்லாம் ரத்தக்களறியாகி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வத்துரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் செல்வத்துரை அளித்த புகாரின் பேரில் அவரைத் தாக்கிய இளைஞர்கள்  சரவணமூர்த்தி (26), கவிவர்மன் (21), அன்புராஜ் (24), கதிரவன் (25), பிரேம்குமார் (22), விக்ரம் (24) ஆகிய ஆறு பேரை புவனகிரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் இந்த தாக்குதலில் ஈடுபட்ட இன்னும் சிலரை வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்று தாக்கப்பட்டவரின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் புவனகிரிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

*/