கடலூர் நீதிமன்ற வளாகத்திற்கு இன்று மீண்டும் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். ஏற்கனவே கடந்த மார்ச் 17 மற்றும் ஜூன் 11 ஆகிய தேதிகளில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இது 3-வது முறையாகும்.மிரட்டலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்தது தனிப்படை போலீஸ்.மோப்ப நாய் 'லியோ' மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் தீவிர சோதனை.
சோதனையின் முடிவில் மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.தொடர் மிரட்டல்களால் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மர்மநபர்களைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment