ஸ்ரீமுஷ்ணம் அருகே காவனூர் கிராமத்தில் திரளபதிஅம்மன் கோவில் தீமிதி திருவிழா பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 1 June 2026

ஸ்ரீமுஷ்ணம் அருகே காவனூர் கிராமத்தில் திரளபதிஅம்மன் கோவில் தீமிதி திருவிழா பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்..

 


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த காவனூர் கிராமத்தில் அருள் பாலித்து வரும் திரளபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 17 தினங்களாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்று கடைசி நாளாக தீமிதி திருவிழா தொடங்கிய நிலையில் மாலை 5 மணி அளவில் வெள்ளாற்றிலிறுந்து பூ கரகம் ஜோடிக்கப்பட்டு மேளதாளம் முழங்க பக்தர்கள் திரளளபதி அம்மன் கோவிலுக்கு வந்த நிலையில் அக்கினிகுண்டம் இறங்குவதற்கு முன்பாக ஆடு பலி கொடுக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அக்னி குண்டத்தில் பூ கிரகம் இறங்கிய நிலையில் மொத்த பக்தர்கள் சுமார் 150 க்கு மேற்பட்டோர் அக்கினி குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர் இதில் உள்ளூர் நாட்டாமைகள் கிராம முக்கிய நபர்கள் கிராம பொதுமக்கள் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/