சேத்தியாத்தோப்பில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு. புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 27 April 2024

சேத்தியாத்தோப்பில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு. புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் திறந்து வைத்தார்.


கடலூர் மாவட்டம்சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை அருகேஅதிமுக நகர செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன் தலைமையில் கோடை வெயிலின் கொடியவெப்பத்தின் தாகத்தை  பொதுமக்கள் தணித்துக் கொள்ளும் விதமாக நீர் மோர் பந்தல் திறப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடலூர் மேற்கு மாவட்ட அதிமுகசெயலாளரும்புவனகிரி எம்எல்ஏவுமாகிய அருண்மொழி தேவன் ரிப்பன் வெட்டி இந்த நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். 

கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் உமா மகேஸ்வரன் உடன் இருந்தார். இதில் தர்பூசணிப்பழம், இளநீர், குளிர்பானபாட்டில்கள், நீர்மோர் ஆகிய கோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பொருள்கள் பொது மக்கள், பேருந்து பயணிகள், வாகன ஓட்டிகள் என பலருக்கும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகரச் செயலாளர்நன்மாறன் அனைவரையும் வரவேற்றார்.


நகர துணைச் செயலாளர் சம்பத், அவைத்தலைவர்கோழி கோவிந்தசாமி, பொருளாளர்ராமலிங்கம், பேரூராட்சி ஒன்றாவது வார்டு செயலாளர்கே பி ஜி.கார்த்திகேயன், அண்ணா பிரபாகரன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு செயலாளர்கள்குணசேகரன், மதியழகன், ஸ்ரீதர், அஞ்சாபுலி, லலிதா, விஜயலட்சுமி,  ராமமூர்த்தி,லிங்குசாமி, ஜபருல்லா, தங்கமணி, ஷேக்அப்துல்லா, ஒன்றிய அவைத்தலைவர் கத்தாழை செல்வராஜ், பின்னலூர், முருகானந்தம், குருதேவ்சிங், ராஜகுரு, கனகரத்தினம், மூர்த்தி, திலீபன், வீரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டு நீர்மோர் பந்தல்திறப்பு விழா நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment