கடலூர் புனித வளனார் கல்லூரியில் சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு பயிற்சி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 1 March 2024

கடலூர் புனித வளனார் கல்லூரியில் சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு பயிற்சி.


கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் நெல்லிகுப்பம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கடலூர் புனித வளனார் கல்லூரி மாணவ மாணவியர்களின் என்.எஸ்.எஸ். முகாமில் பள்ளி மாணவ மாணவிளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 450 பேருக்கு சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு இணைய வழி குற்றம் பற்றி விளக்கப்பட்டது. 

பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், கைபேசி பயன்படுத்துவதினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், ஓ.டீ.பி தொடர்பான குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள்,  போலியான ஆப் களில் பெறும் கடன்கள், போலி வேலை வாய்ப்பு குற்றங்கள், வங்கி கணக்குகளில் நடைபெறும் மோசடிகள், முக்கியமாக படித்த இளைஞர்களை குறிவைக்கும் பகுதி நேர வேலை பொய்யான தகவல் ஆகியவை குறித்து சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 


நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சேவியர், கல்லூரி ஆசிரியர்கள் சந்தான ராஜ்,ஷீலா பள்ளி தலைமை ஆசிரியர் தேவநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளித்து சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரைகள்  வழங்கப்பட்டன. 

No comments:

Post a Comment

*/