வடலூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில்,வள்ளலார் ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைவதை தடுக்க கோரியும், உடனடியாக மாற்று இடத்தில் சர்வதேச மையம் அமைக்ககோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் வடலூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார்.
பாஜக மாவட்ட துணை தலைவர் அறிவழகன், பொதுச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செயலாளர் கார்த்திகேயன்,விவசாயப் பிரிவு மாநில செயலாளர் வெங்கடாஜலம், உட்பட பலர் கலந்து கொண்டு கண்டனவிளக்க உரையாற்றினார்,இலக்கிய அணியின் மாவட்ட தலைவர் அருளலரசன், மற்றும் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் , பாஜகவினர்கள் கலந்து கொண்டனர்
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி

No comments:
Post a Comment