வடலூர் சீயோன் மேல்நிலைப்பள்ளியில் 44 வது ஆண்டு விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 February 2024

வடலூர் சீயோன் மேல்நிலைப்பள்ளியில் 44 வது ஆண்டு விழா நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் வடலூர் வடலூரில் உள்ள சீயோன் மேல்நிலைப்பள்ளியில் 44 வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவினை பள்ளியின் நிறுவனர்  சாமுவேல் அவர்கள் பள்ளியின் தாளாளர் பிரவின் சாமுவேல் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாண்ட்ரி சாமுவேல் மற்றும் பள்ளியின் முதல்வர்  இவான்சி பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ராஜாராம் தலைமையில், வடலூர் காவல் ஆய்வாளர் ராஜா, சாந்தி பர்னிச்சர்ஸ் உரிமையாளர் T. ராஜமாரியப்பன் , வடலூர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர்  S. பிரகாஷ் எஸ் எஸ் கே காய்கறி மண்டி உரிமையாளர் S. சீனிவாசன், விஜயா ஸ்டீல் உரிமையாளர்  S. மணிகண்டன் தமிழ்நாடு அறிவியல் மன்ற செயலாளர் மற்றும் பாஸ்டர்  V. பெஞ்சமின் ஆகிய சிறப்பு விருந்தினராக வருகை தந்து . நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி  தொடங்கி வைத்தனர் . 


பள்ளியின் முதல்வர் ஆண்டு அறிக்கை வாசித்தார் பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் , நடந்த கல்வியாண்டில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், கேடயமும் வழங்கப்பட்டது  ஆண்டு விழாவின் இறுதியாக பள்ளியின் தாளாளர்  பிரவின்சாமுவேல் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.


செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 

No comments:

Post a Comment

*/