கடலூர் மாநகராட்சி புதுப்பாளையம் பகுதியில் இறந்தவர்களுக்கு கரும காரியம் செய்வதற்கு மசூதி தெருவில் கருமகாரிய கொட்டகை உள்ளது ஆனால் சில ஆண்டுகளாக இக் கொட்டகையை தனி நபர்கள் மாடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர் இதனால் அசுத்தமான நிலையில் துர் நாற்றம் வீசுகிறது இப்பகுதியில் இறந்தவர்களுக்கு கரும காரியங்களை செய்வதற்கு கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
வேறு வழியின்றி அருகில் உள்ள அங்கன்வாடி எதிரிலும் அல்லது சாலையில் கருமகாரியங்கள் செய்து வருவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மேலும் அங்கன்வாடி குழந்தைகள் அச்சம் அடைந்து வருகின்றனர் இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூகம ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


No comments:
Post a Comment