பரங்கிப்பேட்டை புது குப்பம் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள் மாசி மகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 February 2024

பரங்கிப்பேட்டை புது குப்பம் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள் மாசி மகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.


கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டை புது குப்பம் கடற்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் நீராடி பின்னர் சாமி தரிசனம் செய்தனர் இதில் குறிஞ்சிப்பாடியில் இருந்து அருள்மிகு சுப்பராயலு சுவாமி கடலில் தீர்த்த வாரி செய்து பின்னர் வண்ண மலர்களால்  அலங்கரிக்கப்பட்டு தீபாரத்னை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பலித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர் பின்னர் அருள்மிகு சுப்பராயில் சுவாமிக்கு புதுக்குப்பம் மீனவ பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சிறப்பான வழிபாடு செய்தனர் 

No comments:

Post a Comment

*/