கடலூரில் தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு புகழஞ்சலி திரளாக கலந்து கொண்ட பெண்கள் கதறி அழுத சோகம் கண்ணீருடன் திகைத்து நின்ற தொண்டர்கள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 February 2024

கடலூரில் தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு புகழஞ்சலி திரளாக கலந்து கொண்ட பெண்கள் கதறி அழுத சோகம் கண்ணீருடன் திகைத்து நின்ற தொண்டர்கள்.


தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கொடி நாள் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு புகழஞ்சலி அஞ்சலி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கடலூர் தேமுதிக கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னதாக  ஜாவன் பவன் சந்திப்பில் இருந்து மௌன ஊர்வலம் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர்  சிவக்கொழுந்து மற்றும் மாவட்டக் கழக அவைத்தலைவர்  ராஜாராம் ஆகியோர் தலைமையில்  ஊர்வலம் தொடங்கி அண்ணா பாலம் பாரதி சாலை வழியாக மாவட்ட கட்சி அலுவலகத்தை ஊர்வலம் வந்தடைந்தது.

பின்னர் கட்சி கொடியை ஏற்றி மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி  ஏழைகள் வாழ நீ செய்த தியாகம் என்னென்ன என்று எங்கே சொல்வேன் அன்பால் சேர்ந்த நெஞ்சங்கள் வாழ நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன் என்று அவருடைய புகழைபாடி புகழஞ்சலி  செலுத்தினர்து இதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.கடலூர் மாநகராட்சி செயலாளர்  சரவணன் முன்னிலை வகித்தார் மாவட்ட கழக பொருளாளர் ராஜ் அன்னதானம் வழங்கினார்.

மாவட்ட துணை செயலாளர் சித்தநாதன், ஒன்றிய கவுன்சிலர் கலாநிதி விழா ஒருங்கிணைப்பாளர் கடலூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் குமரேசன் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர மாநகராட்சி கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் பலர் வாய்விட்டு கதறி அழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க செய்தது சில நிமிடங்கள் செய்வதறியாது கண்ணீருடன் தொண்டர்கள் திகைத்து நின்றனர்.

No comments:

Post a Comment

*/