இந்நிலையில் உணவு சாப்பிட்ட 3 பேருக்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் அரசு பள்ளி மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். புவனகிரி அரசு தாலுகா மருத்துவமனையில் 22 மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் கிரையன் ரவிக்குமார் நேரில் வந்து பள்ளி மாணவர்களை உடல் நலம் விசாரித்தார். உணவில் என்ன விஷ பூச்சி இருந்தது என கேட்டறிந்தார். அதற்கு பள்ளி மாணவர்கள் அரணை இருந்ததாக தெரிவித்தனர். உங்களுக்கு ஏதேனும் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன கேட்டறிந்து அதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர் இடத்தில் தெரிவித்தார். பள்ளி மாணவர்கள் பெற்றோர் இடத்தில் மாணவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தார்.
.jpg)
No comments:
Post a Comment