கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது அதிமுக வடலூர் நகர செயலாளர் சி.எஸ். பாபு தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான சொரத்தூர் ராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment