ஸ்ரீமுஷ்ணம்கிழக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2024

ஸ்ரீமுஷ்ணம்கிழக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.


கடலூர் கிழக்கு மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜோதிப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கடலூர் கிழக்கு மாவட்டச்செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமாகிய கே.ஏ. பாண்டியன் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் முருகுமாறன், கடலூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் கானூர் பாலசுந்தரம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் கே எஸ் கே பாலமுருகன், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியப் பெருந்தலைவர் லதா ஜெகஜீவன் ராம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில்கலந்து கொண்ட ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சிதம்பரம் எம்எல்ஏ   கே.ஏ. பாண்டியன் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் பரமானந்தம், மாவட்டப் பிரதிநிதி மோகன், தேன்மொழிஜெயபால், ஒன்றிய துணைச் செயலாளர் இந்திராணி சிதம்பரம், அம்மா பேரவை ரமேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் பன்னீர்செல்வம், இணைச் செயலாளர்சௌந்தர்ராஜன், வர்த்தக அணிச்செயலாளர் ஜெகதீஸ்வரன் மற்றும் சில நிர்வாகிகளும் கழகத்தின் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டுநிகழ்ச்சியை சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

*/