பரங்கிப்பேட்டையில் காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 January 2024

பரங்கிப்பேட்டையில் காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.


தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளான காணும் பொங்கலை முன்னிட்டு கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அகரம் அருகே உள்ள தனியார் ரைஸ் மில்லில் நேற்று மகளிர்களுக்கான கோலப்போட்டி மற்றும் இளைஞர்கள் சிறுவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டான கபடி ரன்னிங் ரேஸ் உரி அடி விளையாட்டு போட்டிகள்  பேரூராட்சி மன்ற 18-வது வார்டு உறுப்பினரும் பரங்கிப்பேட்டை வட்டார தொழில் வர்த்தக சங்கம் தலைவருமான க.ஆனந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை கழக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் அவர்கள் துவக்கி வைத்தார் இதில் பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முஹம்மது யூனுஸ். திமுக மாவட்ட பிரதிநிதி சங்கர். நகர செயலாளர் முனவர் உசேன். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்.பரங்கிப்பேட்டை வர்த்தக தொழில் சங்கம் மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ். இணைச்செயலாளர் கவிமதி.கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கலீல் மற்றும் கழக நிர்வாகிகள். கழக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினர்.


மேலும் கோலம் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு முதல் பரிசாக டேபிள் டாப் கிரைண்டர். இரண்டாம் பரிசாக மிக்ஸி. மூன்றாம் பரிசாக டேபிள் ஃபேன் வழங்கப்பட்டது மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது இவ்விழாவில் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


செய்தியாளர் சாதிக் அலி 

No comments:

Post a Comment

*/