தற்போது போக்குவரத்துக்குப் பயன்பட்டு வரும் இந்த குறுகிய சேதம் அடைந்த பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்கள், நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் கடும் அவதி அடைந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். பல வாகனங்கள் நடுவிலேயே சிக்கிக் கொண்டு போக்குவரத்து துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவ மழைக்காலம் துவங்கும் போதும் பாலத்தில் தொடர்ந்து கடுமையான சேதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த பரவனாற்றுப் பாலம். உடனடியாக அருகில் கட்டப்பட்ட வரும் நான்கு வழி சாலை புதிய பாலத்தை விரைந்து பணிகள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தற்போது பயன்பாட்டில் உள்ள பாலம் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டால் வாகனங்கள் உள்ளிட்ட பலவும் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படும். வட மாவட்டத்தையும்-தென் மாவட்டத்தையும் இணைக்கும் போக்குவரத்து துண்டிப்பு உருவாகும். இவ்வாறு பல சிரமங்கள்,அடைந்து வரும் வாகன ஓட்டிகள், கிராம மக்கள், விவசாயிகள் கூறும்போது இந்த ஆற்றில் கட்டப்படும் புதிய நான்கு வழிச்சாலை பாலத்தை போர்க்கால அடிப்படையில் பணிகள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment