நெய்வேலியில் ஹோட்டல் உரிமையாளர் சரமாரியாக வெட்டி கொலை; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 October 2023

நெய்வேலியில் ஹோட்டல் உரிமையாளர் சரமாரியாக வெட்டி கொலை; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.

கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 20 பகுதியை சேர்ந்த கண்ணன்  வயது (57) இவர் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 29 பகுதியில்யில் OK பிரியாணி கடை நடத்தி வருகிறார் இந்த நிலையில் இன்று இரவு கடையில் இருந்து  வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் பொழுது வட்டம் 20 ல் பகுதியில் உள்ள கோர்ட் பின்புறத்தில் கண்ணனை மர்ம நபர்கள்  கத்தியால் சரமாரி வெட்டி சாய்த்து விட்டு தப்பித்து ஓடியுள்ளனர், இதில் கண்ணன் துடிதுடித்து இறந்துள்ளார் இதனை அறிந்த நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனின் கடைக்கு பிரியாணி வாங்க சென்ற வாலிபர்கள் கடனாக பிரியாணியை கேட்டுள்ளனர், இதற்கு கண்ணன் கொடுக்க மறுத்ததால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது, பின்னர் கடையில் நடந்த சம்பவம் குறித்து கண்ணன் காவல்துறையில் புகார் செய்ததை எடுத்து கண்ணனின் கடைக்கு மறுநாள் வந்த வாலிபர்கள் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் கண்ணன் மற்றும் பிரியாணி கடையில் வேலை செய்யும் ஊழியர்களை தாக்கம முயன்றனர். இந்நிலையில் மீண்டும் இரண்டு மாதம் கழித்து திடீரென கண்ணன் கொலை செய்யப்பட்டதால் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்குமா அல்லது வேறு யாராவது கொலை செய்தார்களா என்ற கோணத்தில் நெய்வேலி தெர்மல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நெய்வேலி இயங்கி வந்த பிரபல ஹோட்டல் உரிமையாளரை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

*/