அனைத்து மகளிருக்கு மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000 வழங்க கோரி கடலூர் மேற்கு கபாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 October 2023

அனைத்து மகளிருக்கு மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000 வழங்க கோரி கடலூர் மேற்கு கபாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


நெய்வேலி மந்தாரக்குப்பம் ஜெயப்ரியா பேருந்து நிலையம் அருகே கடலூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் அனைத்து மகளிர்க்கும் மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000 வழங்க கோரி திமுக அரசை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக  மாநில செயலாளர் வீனோத் P செல்வம் மற்றும் சிறுபான்மையினர் அணி தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம் மாவட்ட பார்வையாளர் ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கடலூர் மாவட்ட தலைவர் மதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதும் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.


இலவச பேருந்து வசதியை பெண்கள் முறையாக பயன்படுத்த முடியவில்லை, அனைத்து மகளிர்க்கும் பாரபட்சம் இன்றி ரூபாய் ஆயிரம் வழங்கி விடு, திராவிட ஆட்சியை ஒழிக்க அனைத்து மக்களும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தங்களது வாக்குகளை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 8667557062

No comments:

Post a Comment

*/