விருத்தாசலத்தில் மூத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி ராஜரத்தினம் அவர்களை சந்தித்து பொங்கல் பரிசு வழங்கினர்...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காந்தி நகரில் வசிக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பழம்பெரு தியாகி ராஜரத்தினம் அவர்களின் இல்லத்திற்கு சென்று சந்தித்த கட்சி நிர்வாகிகள்,காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் இருதயசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் தியாகி ராஜரத்தினம் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று பொங்கல் பரிசு அளித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
உடன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் கருணாமூர்த்தி, டாக்டர் வைத்தியநாதன் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜீவ்காந்தி வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சுபம் மணிகண்டன் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ராஜசேகர் மாவட்ட பொதுச் செயலாளர் கதிர்வேல் முன்னாள் மாவட்ட செயலாளர் இலைகடை குப்புசாமி முன்னாள் மாவட்ட செயலாளர் பழக்கடை துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment