கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் கடலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன் அவர்கள் தினந்தோறும் செயல்பட்டு கொண்டு வரும் தூய்மை பணியாளருக்கான தினசரி வருகை பதிவினை திடீர் ஆய்வு செய்தார் மேலும் தூய்மை பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த அறிவுரை வழங்கிய பின் திட கழிவு மேலாண்மை திட்ட முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை குப்பை சேகார வாகனங்களை ஆய்வு செய்து பின்பு குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் வீடுவீடாக தள்ளுவண்டிகள் மூலம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிடித்து வாங்கும் முதல் நிலை சேகார பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து விழிப்புணர்வு வழங்கினார் மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் பணிகளுக்கான பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
செயல் அலுவலர் இரா.கிருஷ்ணன் துப்புரவு ஆய்வாளர் மோ.குரு சங்கர் துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேஸ்வரி உடனிருந்தனர்.


No comments:
Post a Comment