மீனாட்சிப்பேட்டையில் மாபெரும் இரண்டாம் ஆண்டு கைப்பந்து போட்டி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பின்புறம் மீனாட்சிப்பேட்டை டிசி நண்பர்கள் நடத்தும் மாபெரும் இரண்டாம் ஆண்டு கைப்பந்து போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் 15 ற்கும் மேற்பட்டோர் அணிகள் கலந்து கொண்டு கைப்பந்து போட்டியை விளையாடினர். இந்த போட்டியில் பொம்மையார்பாளையம் முதல் இடத்தையும், டிசி நண்பர்கள் இரண்டாவது இடத்தையும், தளபதி நண்பர்கள் மூன்றாவது இடத்தையும், பிரகாஷ் பிரதர்ஸ் நான்காவது இடத்தையும், எம்எஸ்கே காய்ஸ் ஐந்தாவது இடத்தையும், பாண்டியன் பிரதர்ஸ் ஆறாவது இடத்தையும், சரத் நண்பர்கள் ஏழாவது இடத்தையும், எம்ஆர்கே நண்பர்கள் எட்டாவது இடத்தை பிடித்து பரசு மற்றும் கோப்பைகளை பெற்று சென்றனர்.

No comments:
Post a Comment