கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக்கூட்டம், ஒன்றிய மன்றக்கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2022-23ஆம் ஆண்டு மேற்கொள்ளும் வளர்ச்சி திட்டப்பணிகளான பொதுநிதி திட்டப்பணிகள் மற்றும் 15-வது நிதிக்குழு மான்ய திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நி.சஃதியாபர்வீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றியக்குழு துணை தலைவர் செல்வக்குமார்,ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வட்டாரவளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சுகுமார், வட்டாரவளர்ச்சி அலுவலர் (கிஊ) பாலகிருஷ்ணன் உதவிப்பொறியாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் அருள்மொழிச்செல்வி, துணைவட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தன், பாலசங்கர், மற்றும் பானுமதி, கணக்கர் (பொது) அ. சதீஷ்குமார் ஆகியோர்கள் கலந்துகொண்டனர் பாலகிருஷ்ணன், து.வ.வ.அ (பொது) மற்றும் நன்றியுரை வழங்கினார்.

No comments:
Post a Comment