வடலூர் சிப்காட் தொழில்பேட்டையில் வடலூர் சிட்கோ உரிமையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தலைவர் பழனிவேல், கௌரவத் தலைவர்கள் ரமேஷ், ராமலிங்கம் ஆகியோர்கள் தலைமை தாங்கினர். சங்க ஆலோசகர் ராஜாராமன் முன்னிலை வகித்தார்.சங்க செயலாளர் சத்தியவேலன் வரவேற்றார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கடலூர் மாவட்ட அரசு தொழில் மைய மேலாளர் ரேஷ்மா மற்றும் நெய்வேலி கனரா வங்கியின் முதன்மை மேலாளர் சுனிதா அவர்கள் கலந்து கொண்டு அலுவலக கட்டிடத்தை குற்றுவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.
மேலும் தமிழக அரசின் MSME திட்டம் குறித்து விளக்கமும் கடலூர் மாவட்ட தொழில் மையம் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படும் கடன் உதவிகள் குறித்து மாவட்ட தொழில் மைய மேலாளர் ரேஷ்மா அவர்கள் எடுத்துரைத்தார். சிறு குறு உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசின் எம் எஸ் எம் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆன்லைன் முன்பதிவு மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் வடலூர் அரிமா சங்கம் சார்பில் சிப்காட் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது
No comments:
Post a Comment