தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து விருத்தாசலத்தில் பெரியார் நகர் கடலூர் மாவட்ட சரவணபவ கூட்டுறவு அங்காடி கடை, கடை எண் 6-ல் விருத்தாசலம் சார் ஆட்சியர் பழனி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்களுக்கு ரூபாய் 1000 ரொக்கம் ஒரு முழு கரும்பு மற்றும் ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் விருத்தாசலம் வட்டாட்சியர் தனபதி, வட்ட வழங்கல் அலுவலர் பூங்குழலி, வருவாய் ஆய்வாளர் செந்தமிழ்வளவன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர்.
.jpg)
No comments:
Post a Comment