கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ம.பொடையூரில் வாய் பேச முடியாத & காது கேட்க முடியாத மாற்றுத்திறனாளியாக உள்ள 28 வயதுள்ள திருமதி பா.பச்சையம்மாளுக்கு அரசு சார்பாக கிடைக்க வேண்டிய சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை ஆதலால் பா.பச்சையம்மாளின் (அதிமுக பிரமுகர் திரு.ரங்கசாமி சின்ன கோனார்) மராட்டிய மாநில பாஜக தென்னிந்திய பிரிவின் மாநில இணை ஓருகினைப்பாளர் திரு.ராஜா உடையாரை நேரில் சந்தித்து மேற்படி பச்சையம்மாளுக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன மிகவும் ஏழை குடும்பம் கட்டிட கூலி வேலைக்கு செய்து வருகிறார். இன்று வரை அரசு சலுகைகள் கிடைக்கவில்லை, அரசு சலுகைகள் வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டனர்
அதன்பின் ராஜா உடையார் தீவிர முயற்சி எடுத்து மாதா மாதம் ₹1500/- கிடைக்க ஏற்பாடு செய்ததோடு மற்றும் அனைத்து சலுகைகளையும் கிடைக்க ஏற்பாடு செய்து உள்ளார்.
மேற்படி திருமதி. பா.பச்சையம்மாளுக்கு அரசு சலுகைகள் கிடைக்க பெரும் உதவி செய்த ராஜா உடையார் அவர்களுக்கும் திட்டக்குடி சமூக பாதுகாப்பு திட்டம் தாசில்தார் திரு. R.ரவிச்சந்திரன், முன்னாள் துணை தாசில்தார் திரு பாலு, ம.பொடையூர் கிராம நிர்வாக அதிகாரி ராசு மற்றும் வருவாய் துறை ஆய்வாளர் செல்வி ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:
Post a Comment