கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் ஆ. மஞ்சக்குழி பு.ஆதிவராக நல்லூர்(பள்ளிக்கூடத் தெரு) கிராமத்தில் பி ஆர் அம்பேத்கர் திடலில் வானவில் கைப்பந்து மற்றும் தமிழன் கபாடி அணி இணைந்து நடத்தும் 32 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவை வானவில் விளையாட்டு குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கல்வி சார்ந்த போட்டிகள்போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் வாலிபால் போட்டியும் கபாடி போட்டியும் அது மட்டும் இன்றி 32 வது ஆண்டு முதல் முறையாக செஸ் போட்டியும் நடைபெற்றது செஸ் போட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரகள் வி.ரிஷி வருமா / வி.விசித்திர வருமா ஆகிய இரண்டு பேரும் முதல் பரிசை வென்றனர் இறுதியாக வெஸ்டர்ன் பாய்ஸ் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
T.பிரபுதாஸ் வானவில் கைப்பந்து அணிக்கு வாலிபால் மற்றும் நெட் வழங்கினார் இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர் (குறிப்பு) இந்த குழு 1990 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
சாதிக் அலி செய்தியாளர்



No comments:
Post a Comment