கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 January 2023

கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா

கடலூர் மாவட்டம் பெரியபட்டில் அமைந்துள்ள "ஆலோடி சாப்தர்கா"வளாகத்தில் கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச் சங்கத்தின் சார்பில்  சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்



கடலூர் மாவட்டம் பெரியபட்டில் அமைந்துள்ள ஆலோடி சாப்தர்கா"வளாகத்தில் கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச் சங்கத்தின் சார்பில்  சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம். 


கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச் சங்கத்தின் தலைவர் பெரியகுமட்டி சிவ. இரவிச்சந்திரன் தலைமை வகித்தார்! தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் கடலூர் மாவட்ட தலைவர் ஆலோடி சாப்தர்கா நிர்வாகி அஸ்லாம் .சட்ட ஆலோசகர் தி.ச.திருமார்பன் கடலூர் மாநகர பொதுநல இயக்கங்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ். என்.கே.இரவிதமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் மாநில அமைப்பாளர் ஏ.எஸ் முஸ்தபா, மாவட்ட பொருளாளர்  சத்தார் சலீம், மாவட்டத் துணைச் செயலாளர் லியாகத் அலி, பரங்கிப்பேட்டை நகர துணை தலைவர் பாபு இஸ்மாயில், கடலூர் மாவட்ட ஊடகப்பிரிவு சாதிக் அலி, பரங்கிப்பேட்டை நகர நிர்வாகி ஜான் பாஷா, இர்பான், தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்ட தலைவர் எ ம. சுப்புராயன் அல்இஹ்சான் நற்பணி மன்றத்தின் செயலாளர் யூசுப்ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


புதுச்சத்திரம் காவல் நிலையம்  உதவி ஆய்வாளர்  சுப்பிரமணியம் தனியார் பேருந்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.குரு ராமலிங்கம் நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை மாவட்ட தலைவர் கே. சிவாஜி கணேசன் .சசிமனித உரிமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் .இரா.பாபு தமிழ்நாடு அரசு பேருந்துகழக பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகி , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தச்சக்காடு ஜெய்சங்கர் திராவிடர் கழகத்தின் இரா. தர்மன் கடலூர் பேருந்து நிலைய சிறுபழவியாபாரிகள் சங்க தலைவர் அன்புச் சகோதரர் கோ. சுகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 


மாற்றுத்திறனாளிகளுக்கு கரும்பு மற்றும் நல திட்ட உதவிகள் பொங்கல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் மதுராந்தக நல்லூர் பழனிவேல், கடலூர் இராஜகுமாரன், பண்ணப்பட்டு செந்தில்குமார், சிதம்பரம் கலையரசி உள்ளிட்ட பல்வேறு சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/