மாநில அளவில்ஜூனியர் சிலம்பம் போட்டி - மேயர் திருமதி சுந்தரி ராஜா துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 January 2023

மாநில அளவில்ஜூனியர் சிலம்பம் போட்டி - மேயர் திருமதி சுந்தரி ராஜா துவக்கி வைத்தார்.

மாநில அளவில்ஜூனியர் சிலம்பம் சாம்பியன்கள் 2022-2023 (ஆண்கள் மற்றும் பெண்கள் ) போட்டி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைப்பெற்றது  கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரி ராஜா குத்துவிளக்கு ஏற்றி போட்டியினை துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் நெல்லிக்குப்பம் நகர மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி ராதாகிருஷ்ணன் கடலூர் மாநகர தி.மு.க செயலாளர் கே.எஸ். ராஜா,ஜி.பீட்டர் ராஜேந்திரம்,ராஜ மாணிக்கம்,சந்திர சேகர் கடலூர் மாமன்ற உறுப்பினர்கள் பிரசன்னா,அருள்பாபு மற்றும் போட்டி இயக்குனர் சுதாகர், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் மாவட்ட செயலாளர் தட்சணா மூர்த்தி,செல்வம்,எழிலரசன் மற்றும் கராத்தே மாஸ்டர் ஆறுமுகம் மேலும் 32 மாவட்டத்தை சேர்ந்த 650 -க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

இதில் 350 மாணவர்களும் 313 மாணவிகளும்  கலந்துக் கொண்டனர். மேலும்  12 கலாச்சார விளையாட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது கம்பு வீச்சு அலங்கார வீச்சு குத்துவரிசை ஒற்றை வாள் வீச்சு ஒற்றை சூடுவாள் வீச்சு இரட்டை சூடு வால் வீச்சு வேல் கம்பு மடு மற்றும் ஆயுத ஜோடி குழு ஆயுத வீச்சு மற்றும் கம்பு சண்டை போட்டிகளில் 9 எடை பிரிவுகள் ஆடவர்களுக்கும் 9 இடை பிரிவுகள் மகளிர்க்கும் நடத்தப்பட்டது.


14 வயது முதல் 18 வயதுக்கு  உட்பட்டவர்களுக்கான போட்டியாகும் இப்போ போட்டியில் வெற்றி பெரும் வீரர் மற்றும் வீராங்கனைகள் வருகிற மார்ச் மாதம் ஜம்மு- காஷ்மீரில் நடைபெறும் 19ஆவது தேசிய ஆடவர் மகளிர் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுவார்கள் இந்த போட்டியில் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

*/