கடலூர் மாநகராட்சி யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 January 2023

கடலூர் மாநகராட்சி யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம்.

கடலூர் மாநகராட்சி யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் மாநகர மேயர் திருமதி.சுந்தரிராஜா தலைமையில் துணைமேயர் பா.தாமரைச்செல்வன், ஆணையர் நாவேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். 

இதில் 24 வது வார்டு மாமன்ற  உறுப்பினர் சரவணன் பேசுகையில் கடலூர் மாநகராட்சி பகுதியான கம்மியம் பேட்டை பகுதியில் இருந்துவந்த குப்பை கிடங்கை முழுமையாக அகற்ற உத்திரவிட்ட மேயர் மற்றும் ஆணையருக்கு நன்றித் தெரிவித்தார் மேலும்  பல உறுப்பினர்கள் தங்களது கோரிக்கையை கூறினார்கள் மேயர் சுந்தரிராஜா அனைவரது கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்று கூறினார். 

No comments:

Post a Comment

*/