கிள்ளை பேரூராட்சி மற்றும் கலைஞர் நகர் இருளர் பழங்குடியினர் பள்ளி இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் சிதம்பரம் சார்-ஆட்சியர் சுவேதா சுமன் IAS அவர்கள் பொங்கல் பானையில் அரிசி போட்டு சர்கரை பொங்கல் செய்தார், பானை பொங்கியதும் பழங்குடி மாணவச்செல்வங்கள்" பொங்கலோ பொங்கல் " என்று கோஷமிட்டனர், பிறகு பழங்குடி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் உமா அவர்கள் வரவேற்றார், பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார் முன்னிலை வகித்தார், செயல் அலுவலர் த செல்வி, ராம்குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கலைஞர் நகர் SMC உறுப்பினர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர், பேரூராட்சி மன்ற உறுப்பினர் குமார் நன்றி கூறினார், ஆசிரியர் மணிமாறன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

No comments:
Post a Comment