கடலூர் மாவட்டம் வடலூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்ஜோதி அரைக்கட்டளை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது நிகழ்ச்சியை அருள்ஜோதி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் வி.வினோதினி அவர்கள் தலைமை வகித்தார்.
அருள்ஜோதி அறக்கட்டளையில் உள்ள தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் முதியோர்கள் அனைவரும் தமிழக பாரம்பரிய முறைப்படி புது பானையில் பொங்கலிட்டு வேட்டி சேலை அணிந்து பொங்கலோ பொங்கல் என்ற கோஷத்துடன் தைத்திருநாளை வரவேற்றனர்.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வள்ளலாரின் பொன்மொழிகேட்ப ஜாதி மத பேதம் கடந்து அனைவருக்கும் உணவு சமைக்கப்படடு சமபந்தி விருந்து வைக்கப்பட்டு. பொங்கல் பரிசு வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் வடலூர் அருள் ஜோதி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் S.விசாலாட்சி, G.வடிவுக்கரசி, G. கோமதி, காந்திமதி, G. கார்த்திக்பரணி, G. ஆனந்த ஜோதி S. நிரஞ்சன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment