கடலூர் வடக்கு மாவட்ட அ.இ.அதி.மு.க தெற்கு ஒன்றியத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் மெடிக்கல் கிருபாகரன் தலைமையில் கடலூர் கூத்தப்பாக்கத்தில் எம்.ஜி.ஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வேலு(எ) ராஜேந்திரன் பகுதி கழக செயலாளர்கள் எம்.சந்தாணம், கே.கே.கதிரவன் ஒன்றிய செயலாளர்கள் ஜெயகாந்தன், மணிகண்டன், ஒன்றிய தலைவர் தெய்வசிகாமணி, துணை செயலாளர் பன்னீர் செல்வம் , இணை செயலாளர் அ.லதா அரசப்பன், பிரதிநிதிகள் சாமிநாதன்,
பிரகாஷ் அமைப்பு சாரா ஓட்டுநர்அணி செயலாளர் பாபு மாவட்ட மகளிர் அணி செயலாளர் கம்சலா இணை செயலாளர் ராதிகா எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் தயாளன், விவசாய அணி செயலாளர் பாக்கியநாதன் சிறப்பு விருந்தினராக மெர்சி் கிருபாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.



No comments:
Post a Comment