கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இன்று சீரும் சிறப்புமாக பொங்கல் பண்டிகை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 January 2023

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இன்று சீரும் சிறப்புமாக பொங்கல் பண்டிகை.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இன்று சீரும் சிறப்புமாக பொங்கல் பண்டிகை கொண்டாடினர்.

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி,ராமநத்தம்,  வேப்பூர், சிறுபாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

திட்டக்குடி

கடலுர் : திட்டக்குடி  காவல் நிலையத்தில் சரக ஆய்வாளர் சீனிபாபு முன்னிலையில் ஜனவரி 15- ந் தேதி  சமத்துவ (சூரியன்) பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு  புடவை கொடுத்து கொண்டாடினார். இதில் உதவி ஆய்வாளர்கள் பாக்யராஜ் மற்றும் தலைமை காவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வேப்பூர்

கடலுர் : வேப்பூர் காவல் நிலையத்தில் சரக ஆய்வாளர் ராமசந்திரன் முன்னிலையில் ஜனவரி 15- ந் தேதி  சமத்துவ (சூரியன்) பொங்கல் கொண்டாடபட்டது, இதில் உதவி ஆய்வாளர்கள் சந்திரா, ரவிசந்திரன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்,தலைமை காவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ராமநத்தம்

கடலூர்: ராமநத்தம் காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ்  தலைமையில் பொங்கல் வைத்து கொண்டாடினர் ராமநத்தம் காவல் உதவி ஆய்வாளர் கோபிநாத்,உதவி ஆய்வாளர் கலியமூர்த்தி, பயிற்சி உதவி ஆய்வாளர் வினித் குமார் மற்றும் ஆய்வாளர்கள் காவலர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்

சிறுப்பாக்கம்

கடலூர்: சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் இன்று சிறுபாக்கம் உதவி ஆய்வாளர்  ஜம்புலிங்கம் தலைமையில் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அனைத்து  காவலர்களும் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

*/