கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே T.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த அமுதமொழி-29 இவரது கணவர்துபாயில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல வீட்டில் உள்ள வேலைகளை செய்து கொண்டு இருந்தார்.
அப்போது பித்தளை பாத்திரங்களுக்கு பாலிஷ் போடுவது போல் வந்த மர்ம நபர்கள் நகையை பாலிஷ் போடுவதாக கூறி நூதன முறையில் 8 பவுன் நகையை பாலிஷ் போடுவது போல் நடித்து வெந்நீர் வேண்டும் வைத்து வாருங்கள் என்று கூறி அமுதமொழியை உள்ளே அனுப்பி விட்டனர்.
விடியோ
அமுதமொழி சுடுதண்ணி வைத்துக் கொண்டு வெளியில் வந்து பார்க்கும்போது இரண்டு மர்ம நபர்களையும் காணவில்லை அமுதமொழியின் கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார் தனது தாய் வீட்டில் இருக்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக ராமநத்தம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய திருட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment