விருத்தாச்சலம் அரசு செராமிக் தொழிற் பேட்டையில் மூடப்பட்ட சுடு சூலை திறக்க கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 December 2022

விருத்தாச்சலம் அரசு செராமிக் தொழிற் பேட்டையில் மூடப்பட்ட சுடு சூலை திறக்க கோரிக்கை.

விருத்தாச்சலம் அரசு செராமிக்  தொழிற் பேட்டையில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் ஜெர்மனி தொழில்நுட்பத்தோடு துவங்கப்பட்ட சுடு சூலை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரிகளின் துணையோடு மூடப்பட்டது அந்த ஜெர்மன் தொழில்நுட்பத் துணையோடு துவங்கப்பட்ட சுடு சூலையை மீண்டும் திறந்து மக்கள் பயன்பாட்டை கொண்டு வர தமிழக அரசு முன்வந்தது புரணமைப்பதற்கான  பணியை துவங்குவதற்கு ரூபாய் இரண்டரை கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் செராமிக் தொழில் பேட்டையில் 40 ஆண்டுகளாக அனுபவத்தில் உள்ள வாடகை பாக்கி இல்லாத நபர்களை கண்டறிந்து 10 பேர் கொண்ட குழுவை உருவாக்கி அவர்களிடத்தில் அரசு சுடுசூலைக்கான சாவியை வழங்கி அந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதற்கிடையில் அதிகாரிகள் அலட்சியத்தால் அந்த பணி நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ளது எனவே இந்த சுடுசூலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்தால் சுமார் 3,000-க்கு மேற்பட்ட குடிசை தொழில் செய்யக்கூடிய மக்கள் பயன்படுவார்கள் என்ற மக்கள் கோரிக்கையை ஏற்று இது தொடர்பாக 



சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை  அமைச்சர் தா.மோ.அன்பரசு  அவர்களையும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கனேசன் அவர்களையும் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர்   தோழர் *VP நாகைமாலி* அவர்கள் அவர்களை செப்டம்பர் 23 அன்று  சந்தித்தும்  நிலைமைகளை விளக்கியும் மனு அளித்தார் அதனைத் தொடர்ந்து 

29-12-22 இன்று

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர்   தோழர்  VP நாகைமாலி அவர்கள் காலை 11 மணி அளவில் பார்வையிட்டார்  இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியும் முதலமைச்சரை சந்தித்து இதனை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர  முயற்சி எடுப்பேன் என்று கூறினார்.



உடன்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோமாதவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.அசோகன் மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கோ.சௌந்தரராஜன் இந்திய குடியரசு கட்சி மாநில துணை செயலாளர் கே.மங்கா பிள்ளை ஜெயக்குமார் செராமிக் உரிமையாளர் கோபால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்ததோழர் வழக்கறிஞர் ஏ சந்திரசேகரன்  மாவட்ட குழு உறுப்பினர் ஆர் கலைச்செல்வன் நகர் குழு தோழர்கள் எம் ஜே நெல்சன் பி செந்தில் கே சேகர் ஆர் சத்யா சுமதி கே கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/