போக்குவரத்தை போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை கடலூர் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேஷ், பண்ருட்டி துணை போலிஸ் சூப்பிரண்டு சபியுல்லா, ஆகியோர் உத்தரவுபடி பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் தலைமையில் செய்துவருகின்றனர். பண்ருட்டி டூ கடலூர் சாலையில் மாளிகைமேடு சந்திப்பில் கடலூர் மாவட்டத்தில் முதல்முறையாக பண்ருட்டியில் தானியங்கி சென்சார் மூலம் இயங்கும் ஒளிரும்போலீஸ் உருவம் சோலாரில் ஒளிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் 100 அடி தூரத்தில் வரும் வாகனங்களுக்கு இது விபத்து பகுதி எச்சரிக்கையாக செல்லவும் என அறிவுறுத்தும் வகையில் GO SLOW என்று 24மணி நேரமும் ஒலிக்கும் வகையில் இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பண்ருட்டியில் அடிக்கடி விபத்து ஏற்படும் சாலைகளில் இதுபோல் அமைக்கப்பட்டு இதன் மூலம் பகலில் மட்டுமல்லாது இரவு நேரங்களில் விபத்துக்கள் நடக்காத வகையில் இது அமைந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment