பண்ருட்டியில் தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்கண்டன உரைநிகழ்த்தினார்.
திமுக அரசின் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வு மற்றும் சட்டம் ஒழுங்குசீர்கேடு ஆகியவற்றை கண்டித்து பண்ருட்டி நகர அதிமுக சார்பில் பண்ருட்டி பஸ்நிலையம் அருகில் பஸ் வெளியே வரும் வழியில் இந்திராகாந்தி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் தாடி முருகன் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தி.மு.க., அரசின் விலைவாசிஉயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டினை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அண்ணாகிராமம் ஒன்றிய சேர்மன் ஜானகிராமன், நகர நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment