கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷம் தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். பிரதோஷ தினமான இன்று சிறப்பு வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றுவருகிறது.
இதனைமுன்னிட்டுசாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் பலர் கலந்தகொண்டு நேர்த்தி கடனுக்காகவும், வேண்டுதல் நிறைவேறவும் பிரதோஷ காலசுற்றில் ஆலயம்வலம், இடமாகவந்து இறைவனை வணங்கி வழிபட்டனர்.
பின்னர் நந்தியின் இருகொம்புகளுக்கு இடையே நந்திக்கு இறைவன் நடனக்காட்சி அளிக்கும் ஐதீகம்நடந்தது.
பின்னர் மாலை 6மணிக்கு பிரதோஷநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 2ம் பிரகாரம் வலம்வரும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

No comments:
Post a Comment