விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திட்டக்குடி வட்டம் சிறுமங்கலம் MGRநகர் அருந்ததியர் பகுதிக்கு பகுதிநேர ரேஷன் கடை திறக்க வலியுறுத்தி மாவட்ட பொருளாளர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அஞ்சலை விஜயலட்சுமி கவிதா மாரியம்மாள் சேகர் சிவசக்தி பெருமாள் தெய்வானை தங்கராசு சுலோச்சனா மருதை காமாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார். பின் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

No comments:
Post a Comment