குறிஞ்சிப்பாடி அருகே சீராளன் அறக்கட்டளையின் சார்பில் ஜெய் பீம் இரவு பாட சாலை ஸ்மீட் துவக்க விழா நடைபெற்றது!!
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பெரிய கண்ணாடி அருகே உள்ள அண்ணா நகர் கிராமத்தில் சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை சார்பாக ஏழை, எளிய மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களின் எதிர்கால கல்வி நலன் கருதி, நிறுவனர் பேராசிரியர் டாக்டர் ஜோதிமணி சீராளன் ஜெய் பீம் இரவு பாட சாலையை துவங்கி வைத்து ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு தேவையான கல்வி உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் ஜெய் பீம் இரவு பாட சாலை ஆசிரியர் செல்வகுமார் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் திருமாறன், இசை அமுதன் போன்றோர்களும் கிராம மக்களும் ஆர்வமுடன் பெரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்..

No comments:
Post a Comment