பண்ருட்டி சிலம்பிநாதன்பேட்டை கிராமத்தில் வரும் ஜனவரி 20ம் தேதி மனுநீதிநாள் விழா மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடக்கிறது.
இதனை முன்னிட்டு பொதுமக்களிடம் மனுக்கள்பெரும் முகாம் இன்று காலை நடந்தது. இதில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணைஆட்சியர்கற்பகம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள்பெறப்பட்டது, இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டி வருவாய் தாசில்தார் வெற்றிவேல் சமூக பாதுகாப்பு தாசில்தார் பலராமன், துணைதாசில்தார்கள் சிவக்குமார், தேவநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment