விருத்தாச்சலம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜிவ் இவர் பாண்டிச்சேரி தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையை முடித்து விட்டு விருதாச்சலம் பெரியார் நகரை சேர்ந்த திருப்பதி என்பவருக்கு சொந்தமான மகேந்திரா வெரிட்டோ காரில் வடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரியை திசையில் வடலூர் இருந்து குறிஞ்சிப்பாடி நோக்கி வந்த பெத்தநாயன்குப்பம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவருக்கு சொந்தமான டாடா சுமோ வாகணம்
வடலூர் அடுத்த ஆண்டிகுப்பம் பகுதியில் எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரா வெரிட்டோ காரின் ஓட்டுநர் பலியானார்.
மேலும் காரின் பயணம் செய்த நபர்களை அங்கிருந்து பொதுமக்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று அதே பகுதியில் காலையில் விவசாயி ஒருவர் வயலுக்கு சென்று வந்த போது எதிரியே அதிவேகாத்தில் வந்த தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது
இப்பகுதியில் தொடர் விபத்து அடுத்து அடுத்து ஏற்படுவதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பிதியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment