அதிமுக சட்டமன்ற அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 14 November 2022

அதிமுக சட்டமன்ற அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது !!!

அதிமுக சட்டமன்ற அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது !!!

கடலூர் மாவட்டம் புவனகிரி அதிமுக சட்டமன்ற அலுவலகத்தில்   புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலருமான ஆ.அருண்மொழி தேவன் அவர்களின்   பொது நிதியிலிருந்து ஏழ்மை நிலையில் உள்ள மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தலைமை தாங்கி  மூன்று சக்கர ஸ்கூட்டிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை கழக செயலாளர் உமா மகேஸ்வரன் மாநில எம் ஜி ஆர் மன்ற செயலாளர் முருகமணி, கடலூர் மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வீரமூர்த்தி சேத்தியாதோப்பு நகரக் கழக செயலாளர் மணிகண்டன், கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் விநாயகமூர்த்தி,  கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கருப்பன், புவனகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான சி.என். சிவப்பிரகாசம், புவனகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சீனிவாசன், ஊராட்சி கழக செயலாளர் A.ஜெயசீலன்  புவனகிரி ஒன்றிய துணைச் செயலாளர் E.G.பிரித்திவி  மற்றும் அதிமுக அனைத்து நிலை பொறுப்பாளர்கள்  மாற்றுத்திறனாளி நல அரசு அலுவலர்கள்அனைவரும் கலந்து கொண்டனர். 
மூன்று சக்கர ஸ்கூட்டியை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் கவனமாக இயக்கி கையாள வேண்டும் என அறிவுரை வழங்கினார் ஸ்கூட்டியை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்

No comments:

Post a Comment