சிதம்பரம் வல்லம்படுகையில் வீடுகளை பயனாளிகளுக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் வழங்கினார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 14 November 2022

சிதம்பரம் வல்லம்படுகையில் வீடுகளை பயனாளிகளுக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் வழங்கினார்.

சிதம்பரம் வல்லம்படுகையில் வீடுகளை பயனாளிகளுக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.11.2022) கன மழையினால் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், வல்லம்படுகையில் வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். 

உடன் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு, மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. சபா. ராஜேந்திரன், திரு. ஜி. அய்யப்பன், திரு. ராதாகிருஷ்ணன், திரு. சிந்தனைச்செல்வன், கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி ஆர். சுந்தரி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் திரு. சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கி.பாலசுப்ரமணியம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment