கே.ஆடூர் ஊராட்சியில் போதை பொருள் விழிப்புணர்வு குழு கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 25 November 2022

கே.ஆடூர் ஊராட்சியில் போதை பொருள் விழிப்புணர்வு குழு கூட்டம்

கே.ஆடூர் ஊராட்சியில் போதை பொருள் விழிப்புணர்வு குழு கூட்டம் நடைபெற்றது 


கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடுர் ஊராட்சியில் போதைப்பொருள் விழிப்புணர்வு குழு கூட்டம் நடைபெற்றது.


ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தி.தணிகைவேல் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக  சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தாலுகா காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைப் பொருளினால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் போதைப்பொருள் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்தும் ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

மேலும் போதைப் பொருள் பயன்படுத்துவோரை அதிலிருந்து மீட்டெடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.மேலும் இந்த கூட்டத்தில் பள்ளி தலைமை, ஆசிரியர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment