நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு டாக்டர் அம்பேத்கர் மாலை அணிவித்து மரியாதை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 26 November 2022

நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு டாக்டர் அம்பேத்கர் மாலை அணிவித்து மரியாதை

நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இன்று கடலூர் மாவட்டம் , தமிழ்நாடு அரசு எஸ்.சி,எஸ்.டி   அலுவலர் நலச்சங்தின் சார்பாக தபால் நிலையம் அருகில் உள்ள டாக்டர் புரட்சியாளர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட தலைவர் பேராசிரியர் அ. பிரபாகரன்   தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் இராம.ஆனந்த் , மாநில இணை செயலாளர் இரா. ஞானசேகரன் , மகளிரணி மாநில இணை செயலாளர் உமா மாலினி, மாவட்ட செயலாளர் 
கு. அருண்குமார், மாவட்ட பொருளார் சுதாகர் , மாவட்ட  ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து நகராட்சி பூங்காவில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டத்தில் டிசம்பர்  17,18.ஆகிய தினங்களில் பிச்சாவரத்தில் நடைபெறும்  மாநில அளவிலான பயிலரங்கத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும் இந்த ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பு பணியினை விரைந்து முடிப்பது மற்றும் காலியாக உள்ள நிர்வாக உறுப்பினர்களின் இடங்களில் புதிய உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பான ஆலோசனைகளை நிர்வாகிகள் வழங்கி சிறப்பித்தனர் .

No comments:

Post a Comment