குறிஞ்சிப்பாடி அடுத்த விருப்பாட்சியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விருப்பாச்சி ஊராட்சி பஞ்சாயத்து உட்பட்ட அம்மன் காரன் காலனியை பகுதியில் வசிப்பவர் கலியமூர்த்தி வீரக்கண்ணு இவர்களுடைய ஓட்டு வீடு தொடர் மழையின் காரணமாக ஒரு பக்கம் சுவர் இடிந்து விழுந்தது இதில் பக்கத்து வீட்டுக்காரரான அரசம்மாள் அவர்களுக்கு தலையி பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இந்த தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்
No comments:
Post a Comment