பூவானிகுப்பம் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆய்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 14 November 2022

பூவானிகுப்பம் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆய்வு.

பூவானிகுப்பம் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆய்வு. 


வடகிழக்கு பருவமழையினால்‌ கடலூர் மாவட்டத்தில்‌ ஏற்பட்டுள்ள பாதிப்புகளை  தமிழ்நாடு முதலமைச்சர்‌  மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாண உதவிகளை வழங்கினார்‌. 

இதனை தொடர்ந்து கடலூர்‌ மாவட்டம்‌, குறிஞ்சிப்பாடி வட்டம்‌, கீழ்பூவாணிக்குப்பம்‌ பகுதியில்‌ நீரில்‌ மூழ்கியுள்ள விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, மழையால்‌ வீடுகளை இழந்த 13 பயனாளிகளுக்கும்‌, கால்நடையை இழந்த ஒரு பயனாளிக்கும்‌, நிவாரணத்‌ தொகை மற்றும்‌ நிவாரணப்‌ பொருட்களை வழங்கினார்‌.

உடன் நகராட்சி நிர்வாகத்‌ துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு,  பொதுப்பணித்‌ துறை அமைச்சர்‌ எ.வ. வேலு வேளாண்மை  உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ எம்‌.ஆர்‌.கே. பன்னீர்செல்வம்‌,  தொழிலாளர்‌ நலன்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ சி.வி. கணேசன்‌, சட்டமன்ற உ றுப்பினர்கள்‌  சபா. ராஜேந்திரன்‌,  ஜி. அய்யப்பன்‌,  ராதாகிருஷ்ணன்‌,  சிந்தனைச்செல்வன்‌, கடலூர்‌ மாநகராட்சி மேயர்‌ ஆர்‌. சுந்தரி, வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை செயலாளர்‌ சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., கடலூர்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ கி.பாலசுப்ரமணியம்‌, மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

No comments:

Post a Comment