கடலூரில் கன மழை பெய்து வருவதையொட்டி மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் அப்புறப்படுத்தும் பணியினை மேயர் சுந்தரி ராஜா போர்கால அடிப்படையில் செய்து வருகிறார்.
இன்று காலை கடலூர் மாநகராட்சி 7வது வார்டு ராயல் சிட்டி நகர்ஙபகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள தகவலறிந்ததும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இயந்திரங்களுடன் சென்று சூழ்ந்திருந்த மழை நீரை மோட்டார் இயந்தரம் மூலம் அப்புறப்படுத்த கூறியதை அடுத்து ஊழியர் மழை நீரை வெளியேற்றினர் இதனால் அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
அப்பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க மேயர் சுந்தரி ராஜா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார் அப்போது மாநகர தி.மு. க.செயலாளர் கே.எஸ். ராஜா மாமன்ற உறுப்பினர் த.சங்கீதா அதிகாரிகள் தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்
No comments:
Post a Comment