குறிஞ்சிப்பாடி பகுதியில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 26 November 2022

குறிஞ்சிப்பாடி பகுதியில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.

குறிஞ்சிப்பாடி பகுதியில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது. 


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த கொத்தவச்சேரி பகுதியை சேர்ந்தவர் ரவி வயது 54 இவர் தனது மனைவியுடன் கொத்தவாச்சேரி முருகன் கோயில் அருகே உள்ள தனது சொந்த நிலத்தில் விவசாய பணி மேற்கொள்ள தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். 


பின்பு தனது இருசக்கர வாகனத்தை அருகே உள்ள முருகன் கோயில் அருகே நிறுத்தி விட்டு நிலத்தில் விவசாயப் பணி மேற்கொண்டு வந்தார் பின்னர் வேலை முடிந்ததும் வீடு திரும்ப முற்பட்ட பொழுது  வாகனம் திருடப்பட்டதாக தெரிய வந்தது 


இதனை அடுத்து அவர் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


இந்நிலையில் குறிஞ்சிப்பாடி காவல் துறையினர்  பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்  பண்ருட்டி அடுத்த இடையார்குப்பம் தெற்கு சாத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜதுரை வயது 34 என்பதும் இவர் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, பண்ருட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரியவந்தது. 


பின்னர் காவல் துறையினர் அவரை கைது செய்து வழக்குப்பதிவு மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 

No comments:

Post a Comment