கடலூர் மாவட்டம் காவல்துறையினர் வருடாந்திர துப்பாக்கி குண்டு சுடும் பயிற்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 19 November 2022

கடலூர் மாவட்டம் காவல்துறையினர் வருடாந்திர துப்பாக்கி குண்டு சுடும் பயிற்சி

கடலூர் மாவட்டம் காவல்துறையினர் வருடாந்திர துப்பாக்கி குண்டு சுடும் பயிற்சிக்காக ராமாபுரம் துப்பாக்கி குண்டு சுடும் பயிற்சிதளத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பொன் கார்த்திக்குமார், அசோக்குமார், சீனிவாசலு, துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், மற்றும் உதவி ஆய்வாளர்கள் இன்று குண்டு சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.


குண்டு சுடும் பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்களை காவல் கண்காணிப்பாளர் பாராட்டி வெகுமதிவழங்கினார்.


பின்னர் காவல்துறை அதிகாரிகளுடன் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் கஞ்சா, லாட்டரி, சாராயம், குற்றங்கள் தடுப்பது சம்மந்தமாகவும் பாரி வழக்கு குற்றங்களில் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

No comments:

Post a Comment